கருணாநிதியுடன் தெலுங்கானா தலைவர் சந்திப்பு
சென்னை:
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் திமுக தலைவர்கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து தனி தெலுங்கானா மாநிலத்திற்கு ஆதரவு கோனார்.
தெலுங்கானா ராஷ்டிர சமிதியும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின்தூக்கத்தைக் கெடுத்துள்ளன. 16 எம்.பி. தொகுதிகளையும் 107 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கியதெலுங்கானா பகுதியில் தனி மாநில கோரிக்கை உச்ச கட்டத்தில் உள்ளது.
இதையே பிரச்சார ஆயுதமாக வைத்து நாயுடுவை ராஷ்டிர சமிதி தாக்கி வருகிறது. இந்த அமைப்புடன் காங்கிரசும்கைகோர்த்துள்ளதால் இப் பகுதியில் நாயுடுவுக்கு பெரும் தோல்வி கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
இந் நிலையில் தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவ் இன்று சென்னை வந்து திமுக தலைவர்கருணாநிதியைச் சந்தித்தார். இரு தலைவர்களும் வரும் நிாடாளுமன்றத் தேர்தல் குறித்தும், அம் மாநில அரசியல்சூழ்நிலை குறித்தும் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி பேசுகையில், தெலுங்கானா மாநிலத்திற்கு ஆதரவு கோரி ராவ் என்னிடம்பேசினார். இது அடுத்த மாநிலப் பிரச்சினை என்பதால் ஆதரவு தர இயலாது என்று அவரிடம் தெரிவித்துவிட்டேன்.
பெரியார், அண்ணா வழியில் ஜெயலலிதா செயல்படுவதாக துணைப் பிரதமர் அத்வானி கூறியுள்ளார். இதன்மூலம் அந்த இரு பெரும் தலைவர்களையும் அத்வானி கேவலப்படுத்தியிருக்கிறார் என்றார்.












Click it and Unblock the Notifications