போலீஸ் கண்காணிப்பில் முத்திரை தாள் வியாபாரிகள்
சென்னை:
சென்னை நகரில் உள்ள முத்திரைத் தாள் விற்பனையாளர்களை சிபிசிஐடி போலீஸார் தீவிரமாகக் கண்காணித்துவருகிறார்கள்.
இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள போலி முத்திரைத் தாள் விவகாரம் தமிழகத்திலும் தற்போதுவிஸ்வரூபமெடுத்து வருகிறது. போலி முத்திரைத்தாள் விவகார நாயகனான அப்துல் கரீம் டெல்ஜியின் கூட்டாளிநிஜாமுதீனுக்கும், தமிழக காவல்துறை அதிகாரிகள் முகம்மது அலி, அமித் வர்மா ஆகியோருக்கும் இடையேதொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. தற்போது இது தொடர்பான வழக்குகளை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கஉள்ளனர்.
இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு தாம்பரம் சார்-பதிவாளர் அலுவலக வளாகத்தில் போலி முத்திரைத்தாள்களை விற்றதாக கோவிந்தராஜன், ராமச்சந்திரன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்துசென்னை நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது முத்திரைத் தாள் விவகாரத்தில் மேலும் சிலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. அண்ணா நகர்,சைதாப்பேட்டை பகுதியில் உள்ள சில முத்திரைத் தாள் விற்பனையாளர்கள் நிஜாமுதீனின் நெருங்கிய கூட்டாளிகள்என்று தெரிய வந்துள்ளது.
இதையடுத்து சென்னையில் உள்ள முத்திரைத் தாள் விற்பனையாளர்களை தீவிரமாகக் கண்காணிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் இறங்கியுள்ளனர்.
விரைவில் போலி முத்திரைத் தாள் தொடர்பான விசாரணையில் சிபிஐ இறங்கவுள்ளது. அப்போது பல்வேறுஉண்மைகள் வெளியாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications