For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இருதய அறுவை சிகிச்சை: ஈராக் குழந்தைகளுக்கு சங்கராச்சாரியார் ஆசி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் உள்ள மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 20 ஈராக் குழந்தைகளையும்காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நேரில் சந்தித்து ஆசி வழங்குகிறார்.

சென்னை முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனையின் இதய நோய்களுக்கான சர்வதேச சிகிச்சைமையத்தின் சார்பில் ஈராக் நாட்டைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இலவச இருதய சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக 20 ஈராக் குழந்தைகள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று (சனிக்கிழமை) சந்தித்து ஆசி வழங்குகிறார்.

மேலும், மத்திய அரசின் சார்பில் டெல்லியில் உள்ள சுகாதாரப் பணிகளுக்கான கூடுதல் இயக்குனர் டாக்டர் சாம்பசிவ ராவும்சென்னை வந்து இந்தக் குழந்தைகளுக்குத் தேவையான மருந்துகள், அறுவை சிகிச்சைக்கான கருவிகளையும் வழங்கவுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X