மங்களூர் சட்டசபை தொகுதி திமுக வேட்பாளர் வே.கணேசன்
சென்னை:
மங்களூர் சட்டசபைத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் திமுக வேட்பாளராக வே.கணேசன் போட்டியிடுகிறார்.
மங்களூர் தனித் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர் திருமாவளவன். திமுகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்துமங்களூருக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் ராமலிங்கம் போட்டியிடுகிறார்.
இந் நிலையில் திமுக வேட்பாளரை முடிவு செய்ய இன்று அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடந்தது. 23 பேர்போட்டியிட மனு செய்து நேர்காணலில் கலந்து கொண்டனர். அவர்களிடம் கட்சியின் தலைவர் கருணாநிதி,பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலின்ஆகியோர் நேர்காணல் நடத்தினர்.
இறுதியில் வே.கணேசன் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.
முன்னதாக திமுக கடலூர் மாவட்டச் செயலாளர், நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மங்களூர்தொகுதி ஒன்றிய செயலாளர்கள் ஆகியோரின் கூட்டத்தையும் நடத்திய கருணாநிதி வேட்பாளராக யாரைத் தேர்வுசெய்யலாம் என்று ஆலோசித்தார்.
சட்டமன்றத்தில் மதிமுகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாததால் தங்களுக்கு இந்தத் தொகுதியை ஒதுக்க வேண்டும் எனஅக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை வைத்துப் பார்த்தார். ஆனால், அதை திமுகவும் பா.ம.க.தலைவர் ராமதாசும் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.