சோனியா, ராமதாஸ், வைகோ மீது ஜெ. மீண்டும் பாய்ச்சல்
ஓசூர்:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர்மீது முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடும் தாக்குதல் தொடுத்தார்.
தர்மபுரி தொகுதிக்குட்பட்ட சிங்காரப்பேட்டை, பெரியதாடனூர் ஆகிய கிராமங்களில் அவர் பிரச்சாரம்மேற்கொண்டார் அப்போது சோனியாவை பிடி பிடித்தார். ராஜீவ் காந்தியைக் கொலை செய்தவர்களை ஆதரிக்கும்திமுக, மதிமுக, பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் சோனியா கூட்டணி வைத்துள்ளார்.
சந்தர்ப்பவாத கூட்டணி வைத்துள்ள சோனியா காந்தி இந்தியாவின் பிரதமராகும் தகுதி இல்லாதவர். ஒருவெளிநாட்டுக்காரரை பிரதமராக ஏற்கும் அளவுக்கு இந்தியர்கள் முட்டாள்கள் அல்லர்.
அதிகாரத்தை மட்டுமே அனுபவிக்கும் மனப்பான்மை கொண்ட கட்சிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டதுதான்ஜனநாயக முற்போக்குக் கூட்டணி (திமுக தலைமையிலான கூட்டணி). இந்தக் கட்சிகளிடம் ஆட்சியைக்கொடுத்தால், நாட்டை அழிவுப்பாதைக்குக் கொண்டு சென்று விடுவார்கள்.
இந்தியா ஒற்றுமையோடும், ஒருமைப்பாட்டோடும், இறையாண்மையோடும் இருந்திட பிரிவினைவாத, தீவிரவாதசக்திகளைப் புறக்கணியுங்கள். உலக அரங்கில் இந்தியாவை வல்லராசக மாற்றுவோம். நாளைய பாரதம் வல்லரசு,நாட்டுக்குத் தேவை நல்லரசு என்றார் ஜெயலலிதா.
காவேரிப்பட்டினம் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசும்போது,
திமுக கூட்டணியில் இருக்கும் ராமதாசுக்கு எதிலும் ஒரு நிலைப்பாடு இல்லை. காலையில் ஒரு பேச்சு, மாலையில்ஒரு பேச்சு, தேர்தலுக்கு முன் ஒரு பேச்சு, தேர்தலுக்குப் பின் ஒரு பேச்சு. இவர் பேசுவதில் எது சரி என்று புரிந்துகொள்ள முடியாமல் மக்கள் திணறுகிறார்கள். ஒரு சாதியினரின் நன்மைக்காக மட்டுமே கட்சி நடத்தும் ராமதாஸாதமிழ் இனத்தைப் பற்றியும், தமிழர் ஒற்றுமை பற்றியும் பேசுவது?
வசனம் பேசுவதையே தன் வாழ்க்கையாக எண்ணிக் கொண்டிருப்பவர் வைகோ. இந்த வாய்ச்சவடால் மன்னரால்,அவரது கட்சியால் தமிழகத்துக்கு ஏதேனும் நன்மை கிடைத்ததுண்டா என்று பேசினார் ஜெயலலிதா.
ஜெயலலிதா தனது பிரச்சாரத்தின்போது கூடியிருப்பவர்களிடம் அடுத்த பிரதமர் யார் என்று அடிக்கடி கேட்டுவருகிறார். அவர் அப்படிக் கேட்கும்போதெல்லாம், நீங்கள்தான் அம்மா என்றுதான் அதிமுகவினர் கூறுகிறார்கள்.யாரும் தவறிப் போய்க் கூட வாஜ்பாய் என்று கூறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.