மாமியார் கொடுமை: 3 குழந்தைகளுடன் தாய் தீ வைத்து தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மாமியாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம் பெண் தனது மூன்று குழந்தைகளுடன் உடலில் தீ வைத்துதற்கொலை செய்து கொண்டார். சென்னை ஆவடி அருகே இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது.

ஆவடி முத்தாபுதுப்பேட்யைைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி சீனிவாசன். இவரது மனைவி மாலதி (வயது 28).இவர்களுக்கு கமலி (6), வருசம்மா (5), கிஷோர் (3) ஆகிய மூன்று குழந்தைகள். இவர்களது வீட்டுக்கு அருகில்சீனிவாசனின் தாயார் கிருஷ்ணவேணி வசித்து வருகிறார்.

மாமியார் கிருஷ்ணவேணிக்கும் மாலதிக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதுண்டு. மாலதியை கிருஷ்ணவேணிகொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

இந் நிலையில் நேற்றிரவும் மருமகள் மாலதியுடன் சண்டைக்குப் போனார் கிருஷ்ணவேணி. வாய்க்கு வந்தபடிஅவர் திட்டியதால் அழுதபடியே தன் குழந்தைகளை இழுத்துக் கொண்டு வீட்டுக்குள் போன மாலதி, அவர்கள் மீதுமணணெண்ணையை ஊற்றி தீ வைத்தார்.

பின்னர் தன் மீதும் தீ வைத்துக் கொண்டார். இதில் குழந்தைகள் அலறித் துடித்தன. வீட்டை உள்பக்கமாக மாலதிபூட்டிக் கொண்டதால் யாராலும் உள்ளே நுழைய முடியவில்லை. சிறிது நேரத்தில் வீடே தீப்பிடித்துக் கொண்டது.

பொது மக்கள் திரண்டு வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது மாலதியும், குழந்தைகள் கமலியும்கிஷோரும் உடல் முழுவதும் கரிக்கட்டையாக எரிந்து, இறந்து கிடந்தனர். வருசம்மாவின் உடலில் உயிர் இருந்தது.

அந்தக் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு பொது மக்கள் கொண்டு சென்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றிஅவளும் இறந்தாள்.

இந்தச் சம்பவம் அப் பகுதியை பெரும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+