ஜீவஜோதியின் கணவரை நான் கொல்லவில்லை: சரவண பவன் ராஜகோபால்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜீவஜோதியின் கணவரை நான் கொல்லவில்லை. புகழ் பெற்ற எனது நிறுவனத்திற்கும், எனக்கும் களங்கம்விளைவிக்க போடப்பட்டுள்ள பொய் வழக்கு இது என்று சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால்பூந்தமல்லி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த சாந்தக்குமார் என்பவரை ராஜகோபால் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டதாக அவரது மனைவி ஜீவஜோதி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் ராஜகோபால் உள்ளிட்ட 9 பேரைக்கைது செய்துள்ளனர்.

இவர்கள் மீதான வழக்கு பூந்தமல்லியில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ராஜகோபாலுக்கு எதிரான பலஅரசுத் தரப்பு சாட்சிகள் பல்டி அடித்துள்ள நிலையில் ராஜகோபால் உள்ளிட்ட 9 பேரிடம், உங்கள் மீதானகுற்றச்சாட்டு குறித்து ஏதாவது கூற விரும்புகிறீர்களா என்று நீதிபதி செல்வக்குமார் கேட்டார்.

அப்போது ராஜகோபால், இது அப்பட்டமான பொய் வழக்கு. புகழ் பெற்ற எனது நிறுவனத்தையும், என்னையும்குறிவைத்து, எனது நிறுவனத்தில் வேலை பார்த்தவரும் (ஜீவஜோதியின் தந்தை) அவரது குடும்பத்தினரும் சேர்ந்துசெய்துள்ள சதியே இது.

நான் அப்பாவி. சாந்தக்குமாரை நான் கொலை செய்யவில்லை. அந்த அளவுக்கு இறங்குபவனும் அல்ல. இந்தவழக்கில் தேவையில்லாமல் எனது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்றார்.

குற்றம் சாட்டப்பட்ட மற்ற 8 பேரான டேணியல், காசி, ஹூசேன், கார்மேகம், தமிழ் செல்வன், பட்டுராஜன், சேது,முருகானந்தம் ஆகியோரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று தெரிவித்தனர்.

இந்த வழக்கில் ராஜகோபால் தரப்பு சாட்சியாக தடயவியல் நிபுணர் சந்திரசேகர் வருகிற 22ம் தேதி சாட்சியம்அளிக்கவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+