For Daily Alerts
Just In
மழையும் தருவார் அம்மா: அமைச்சர் உளறல்
திருநெல்வேலி:
திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஜெயலலிதா பிரச்சாரம் செய்யும்போது கன மழை பெய்யும் என்று ஆதி திராவிடநலத்துறை அமைச்சர் கருப்பசாமி தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் அதிமுக-பா.ஜ.க. தொண்டர்கள் கூட்டம் நடந்தது. அந்தக்கூட்டத்தில் கருப்பசாமி பேசுகையில், அம்மாவின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் மழையே இல்லை என்றுதிமுகவைச் சேர்ந்த கருப்பசாமி பாண்டியன் கூறியுள்ளார்.
அவரது வாதத்தைப் பொய்யாக்கும் விதத்தில், அம்மா, நெல்லை மாவட்டத்திற்குப் பிரச்சாரம் செய்ய வரும்போதுகன மழை பெய்யும். பிரச்சாரத்திற்கு மக்களை சந்திக்க வரும்போது மழையையும் அழைத்துக் கொண்டு வருவார்நம் அம்மா என்று கூறி தொண்டர்களின் கைத்தட்டலை வாங்கிக் குவித்தார்.
ஒரு வேளை "அம்மா" மழையைக் கொண்டு வராவிட்டால் என்ன பதில் சொல்வார் மாண்புமிகு அமைச்சர்?
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Monday, March 22, 2004, 5:30 [IST]