வாஜ்பாய்- அத்வானி இடையே பிளவை ஏற்படுத்த கருணாநிதி முயற்சி: பா.ஜ.க
சென்னை:
தவறான தகவல்களால் பிரதமர் வாஜ்பாய்க்கும், துணைப் பிரதமர் அத்வானிக்கும் இடையே பிளவை ஏற்படுத்ததிமுக தலைவர் கருணாநிதி முயற்சி செய்வதாக இந்திய பா.ஜ.க. செயலாளர் இல.கணேசன் கூறியுள்ளார்.
வாஜ்பாய்க்கு எதிராக பா.ஜ.கவில் சூழ்ச்சி வலை பின்னப்பட்டிருப்பதாக கருணாநிதி செய்தியாளர்களிடம்தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்து இல.கணேசன் கூறியதாவது:
வெளிநாட்டவர் பிரதமர் ஆகலாமா என்ற பா.ஜ.கவின் கேள்விக்கு பதிலளிக்க முடியாததால், கருணாநிதி பா.ஜ.க.மீது ஆதாரமற்ற, தவறான குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார் என்றார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் திமுகவுக்கு, குறிப்பாக அதன் தலைமைக்குத் தொடர்பிருப்பதாகக் கூறி ஐ.கே.குஜ்ரால் அமைச்சரவைக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சீதாராம்கேசரி அப்போதைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணுக்கு எழுதிய கடிதத்தையும் இல.கணேசன் இன்றுவெளியிட்டார்.
தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான விடுதலைப் புலிகளுடன் தொடர்பிருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறியகுற்றச்சாட்டுகளை, இப்போது ஏற்பட்டுள்ள கூட்டணிக்காக திமுகவினர் ஜீரணத்துக் கொண்டார்களா? இதற்கானநேரடியான பதிலை நான் எதிர்பார்க்கிறேன் என்றார் கணேசன்.












Click it and Unblock the Notifications