அமேதியில் ராகுல் காந்தி போட்டி: நாளை தமிழக காங். வேட்பாளர் பட்டியல்?
சென்னை:
காங்கிரஸ் சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மூன்றாவது பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது.
இதில், ராஜிவ் காந்தியின் மகன் ராகுல் காந்திக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதிஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நேரு குடும்பத்தின் அடுத்த தலைமுறையும் காங்கிரசில் அடி எடுத்துவைத்துவிட்டது. இந்தத் தொகுதி ராஜிவ் பலமுறை வென்ற தொகுதியாகும். சோனியாவும் இங்கு போட்டியிட்டுவென்றுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அதே மாநிலத்தில் உள்ள ரே பரேலியில் போட்டியிடுகிறார். இந்தத்தொகுதியில் இந்திரா காந்தி பலமுறை போட்டியிட்டு வென்றுள்ளார்.
நாளை தமிழக பட்டியல்?:
மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் மூன்றாவது வேட்பாளர் பட்டியலும் வெளியாகிவிட்ட நிலையில்.தமிழகத்தில் போட்டியிடும் 8 காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படாததால் மாநிலகாங்கிரசார் கடும் விரக்தியில் ஆழ்ந்துள்ளனர்.
தமிழகத்தில் 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதில் மயிலாடுதுறை மற்றும் நீலகிரி ஆகியதொகுதிகளின் வேட்பாளர்களை மட்டுமே கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. மீதள்ள 8 தொகுதிகளின்வேட்பாளர்களை இன்னும் அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
வேட்பாளர் தேர்வில் குழப்பம் இருப்பதாகக் கூறப்பட்டாலும் கூட இவ்வளவு தாமதம் கட்சிக்கு நல்லதல்ல என்றுகட்சி தலைவர்கள் முணுமுணுக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும், கட்சி மேலிடத்தின் இந்ததாமதம் குறித்து அதிருப்தி அடைந்துள்ளார்.
டெல்லி சென்றுள்ள அவர் சோனியாவிடமே தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.வேட்பாளர்கள் பெயர்களை விரைவில் அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே, 8 பேர் கொண்ட தற்காலிக வேட்பாளர் பட்டியலில் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை என்றுகூறப்படுகிறது. இதையும் சோனியாவிடம் சுட்டிக் காட்டிய வாசன், ஒரு பெண் வேட்பாளர்கூட இல்லாவிட்டால்நன்றாக இருக்காது என்று எடுத்துரைத்துள்ளார்.
இந் நிலையில் நாளை இந்த 8 பேரின் பெயர்களும் வெளியாக வாய்ப்பிருப்பதாக டெல்லி வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.
தேர்தல் அறிக்கை வெளியீடு:
இந் நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை சோனியா காந்தி இன்று வெளியிட்டார். வேலையில்லாதிண்டாட்டத்தைப் போக்கவும், சிறுபான்மையோர், பெண்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காகவும் காங்கிரஸ்கட்சி பாடுபடும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்படுகிறது.