இந்திய அணியின் வெற்றியால் அளவுக்கதிக மகிழ்ச்சி: முதியவர் திடீர் சாவு

Subscribe to Oneindia Tamil

தரங்கம்பாடி:

பாகிஸ்தானுடான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பரபரப்பான கடைசி நிமிடங்களைப் பார்த்துக்கொண்டிருந்த முதியவர், இந்திய அணி பெற்ற வெற்றியால், அளவுக்கு அதிகமாக மகிழ்ச்சியடைந்துஉணர்ச்சிவசப்பட்டதில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

சிதம்பரத்தையடுத்துள்ள தரங்கம்பாடியில் இச் சம்பவம் நடந்தது. நேற்று இந்த கிரிக்கெட் போட்டி நடந்தது.

இதை கோவிந்தசாமி என்ற 85 வயது முதியவர் ஆர்வத்துடன் டிவியில் பார்த்துக் கொண்டிருந்தார். இந்திய அணிவெல்ல வேண்டும் என்று காலையில் இருந்து பரபரப்பாக இருந்தவர், அடிக்கடி இதற்காக பூஜைகளையும் செய்தார்.சரியாக உணவும் உட்கொள்ளாமல் டிவி முன் உட்கார்ந்திருந்தார்.

4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாறியபோது மிகவும் நொந்து போய் மனம் வருந்தினார். தோற்கும்நிலையில் இருந்த அணியை முகம்மத் கைப் மற்றும் ராகுல் திராவிட் ஆகியோர் சேர்ந்து கரையேற்றிக்கொண்டிருந்தனர்.

இதனால் பரபரப்பானார் கோவிந்தசாமி. அளவுக்கு அதிகமான மகிழ்ச்சியில் குதித்தார். உற்சாகத்தில் சத்தமிட்டார்.உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இருந்த அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

மேட்ச் பார்த்துக் கொண்டே இருந்தவர் திடீரென சரிந்து விழுந்தார். வீட்டினர் அவரை சோதித்தபோது அவர்இறந்து போயிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+