For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாய்: ஊதியம் கேட்டு 2,000 இந்தியர்கள் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

துபாய்:

கடந்த 3 மாதங்களாக தங்களுக்கு வழங்கப்படாத சம்பளத்தை பெற்றுத் தரக் கோரி சுமார் 2,000 இந்தியர்கள்துபாயில் போராட்டம் நடத்தினர்.

துபாய் அல் குஷ் தொழில் மண்டசலப் பகுதியில் உள்ள ஒரு கட்டட நிறுவனத்தில் வேலை செய்யும்தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.

தங்களது சம்பளத்தை பெற்றுத் தரக் கோரி சுமார் 2,000 பேர் அல் குஷ் பகுதியிலிருந்து, தொழிலாளர் நலஅமைச்சகம் நோக்கி ஊர்வலம் சென்றனர். இதில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்.

இந்த ஊர்வலம் காரணமாக துபாய்- அபுதாபி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களின் பிரதிநிதிகள், தொழிலாளர் நல அமைச்சகத்தின் அதிகாரிகளிடம் புகார்கொடுத்தனர். சம்பளத்தை வாங்கித் தருவதாக அதிகாரிகள் அவர்களிடம் உறுதியளித்தனர்.

துபாயில் கட்டட வேலை செய்பவர்களுக்கு மாத சம்பளமாக 500 முதல் 600 திர்ஹாம்ஸ் வரை வழங்கப்படுகிறது.இந்த வேலைக்காக ரூ.60,000 முதல் ரூ. 1,00,000 வரை பணம் கட்டி வருபவர்களில் பெரும்பாலானவர்கள்இந்தியர்கள்தான்.

கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையின் மனித உரிமை கண்காணிப்பு ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்,வளைகுடா நாடுகளில் தொழிலாளர்கள் மோசமாக நடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X