தலித்துகள் ஒன்றிணைய பெர்னாண்டஸ் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சேலம்:

தலித் சமுதாயத்தினர் எப்போதும் ஒற்றுமையாக இருந்தால்தான் ஜாதி பலம், பண பல அரசியலை எதிர்த்துப்போராடி வெற்றி பெற முடியும் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.

சேலம் நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இந்துத்வா கொள்கை எதிர்ப்பு மாநாடு நடந்தது. போஸ்மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் சிறப்பு விருந்தினராக ஜார்ஜ் பெர்னாண்டஸ் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், 2000ஆண்டுகளுக்கு முன்பு இமயமலையைத் தாண்டி கணவாய்கள் மூலமாக இந்தியாவுக்குள் ஏராளமானோர்ஊடுறுவினர். ஆரம்பகால ஊடுறுவல்களின்போது 200 குதிரைகளுடன் வந்தவர்கள் இங்கு ஜாதிய முறைகளைத்தொடங்கினர்.

தங்களுக்குரிய அரசாங்கத்தை ஏற்படுத்தினர். தங்களுக்குக் கீழ் தான் மற்றவர்கள் என்ற சட்டத்தை வகுத்தனர்.இவர்களை விரட்டியடிக்க இன்னொரு கும்பல் ஊடுறுவியது. இப்படியாக உருவானதுதான் நமது பாரத சமுதாயம்.

இன்று வரை நாம் ஜாதிகளின் மோதலுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறோம். இதில் அதிகம் பாதிக்கப்படுவது,தலித்துகளும், நலிவடைந்த பிரிவினரும்தான்.

தலித் மக்கள் தொடர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும்.அப்போதுதான் அரசியலிலும் சரி, சமூகத்திலும் சமபலம் வாய்ந்த ஜாதிகளையும், பண பலத்தையும் எதிர்த்துப் போராட்டியும்.

தமிழகத்தில் மக்கள் கூட்டணிக்கு ஐக்கிய ஜனதாதளம் ஆதரவு தெரிவிக்கிறது. அதற்காக நாங்கள் பா.ஜ.கவைஎதிர்க்கிறோம் என்று அர்த்தம் கிடையாது என்றார் பெர்னாண்டஸ்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சோனியா காந்தி பிரதமராக வருவதை நாங்கள் எதிர்க்கவில்லை.ஆனால் சோனியாவைத் தவிர வேறு யாரையும் பிரதமராக அறிவிக்க காங்கிரஸ் தயங்குவது ஏன் என்பதுதான்எங்களது கேள்வி என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+