நிலையான அமைதிக்காகவே இடைத்தேர்தல்: சந்திரிகா
கொழும்பு:
நிலையான, உண்மையான அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகவே இடைத்தேர்தல்நடத்த உத்தரவிட்டேன் என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரபல ஆங்கிலப் பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
இலங்கை அரசியல் மோசமானதாகும். நாகரிகமான மக்கள் அதில் ஈடுபட விரும்பமாட்டார்கள்.
கூட்டாட்சித் தத்துவத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே உடைத்ததால்தான், அரசைக் கலைத்து தேர்தலை நடத்தஉத்தரவிட வேண்டியதாயிற்று.
என்னை ரணில் புறக்கணித்தார். அதிபர் பதவியில் இருந்து என்னை நீக்கிவிட்டு, அதிபராக வேண்டும் என்றஎண்ணம் அவருக்கு உள்ளது. நாடு என்னவானாலும் பரவாயில்லை என்று கருதுகிறார். விடுதலைப் புலிகள்,மக்கள், அதிபர் என அனைவரையும் ஏமாற்றி வருகிறார்.
புலிகளுடன் பல ரகசிய உடன்படிக்கைகளைச் செய்துள்ளார். அது என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை.இப்போது ஏற்பட்டுள்ளது போலல்லாமல் நிலையான, உண்மையான அமைதி ஒப்பந்தம் ஏற்பட வேண்டும்என்றார்.












Click it and Unblock the Notifications