காசு கொடுத்தும் ஜெவுக்கு கூட்டம் கூடவில்லை: வைகோ
திருச்சி:
மதிமுக தொழிற்சங்கத் தலைவர் மூர்த்தியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து திட்டமிட்டுநீக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து தேர்தல் ஆணையத்துக்குப் புகார் கடிதம் அனுப்ப இருப்பதாகவும் மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
திருச்சியில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தமிழகம் முழுவதுமே வாக்காளர் பட்டியலில் மிக பெரிய மோசடி நடந்துள்ளது. திட்டமிட்டு எதிர்க்கட்சியினரின்பெயர்கள் நீக்கப்பட்டு உள்ளன. ஏராளமான போலி வாக்கா ளர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். திராவிடஇயக்கத்தின் மூத்த தலைவரும், மதிமுக தொழிற்சங்கத் தலைவருமான மூர்த்தி பெயர் நீக்கப்பட்டு உள்ளது.
இந்த வாக்காளர் பட்டியல் குளறுபடி குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யவுள்ளோம்.
ஜெயலலிதா மீது மக்களுக்கு உள்ள ஆத்திரம் காரணமாகவே அவர் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம்சேரவில்லை. பணத்தை கொடுத்தும் எதிர்பார்த்த கூட்டம் கூடவில்லை.
லாவணி பாடும் அரசியல்வாதி என்று முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரத்தின் போது என்னைப் பற்றி பேசி வருகிறார்.சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார். தமிழகத்துக்கும் தமிழக மக்களுக்கும் என்ன செய்திருக்கிறேன்என்பதை நாடு அறியும். நாகரீகம் உள்ள எதிர்கட்சியினரும் அறிவார்கள்.
ஜெயலலிதாவைப் போல ஒருவர் எழுதி கொடுத்த உரையை திரும்ப திரும்ப படிப்பவன் நானல்ல. எழுதிகொடுப்பவர் அடுத்த வசனம் எழுதிக் கொடுக்கும் வரை இது போன்ற வசனங்கள் வரத்தான் செய்யும்.
எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை வருகிற 26-ந்தேதி கோவையில் வெளியிடுகிறோம். அதற்கு அடுத்த நாள்திருச்சியில் நான் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடக்கிறது. நாடாளுமன்றத்தில் நான் என்ன பணியாற்றினேன்என்று ஜெயலலிதா கேட்டு வரும் கேள்விகளுக்கு அந்தப் புத்தகம் பதில் தரும் என்றார்.