அதிமுகவில் இணைந்த முன்னாள் காங். எம்.பி
சென்னை:
கோவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 3 முறை எம்.பியாக இருந்த சி.கே. குப்புசாமி திடீரெனஅதிமுகவில் இணைந்தார்.
கோவை தொகுதியின் தற்போதைய எம்.பியும், மாநில பா.ஜ.க. தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணனின்நெருங்கிய உறவினர்தான் சி.கே.குப்புசாமி. முன்னாள் போலீஸ்காரரான இவர் தான் டி.எஸ்.பி.பனியன்கள்-ஜட்டிகள் தயாரிக்கும் நிறுவனத்தின் அதிபர்.
இவர் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் 1984ம் ஆண்டிலிருந்து மூன்று முறை காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டுவென்றுள்ளார். இவரை சி.பி.ராதாகிருஷ்ணன்தான் தோற்கடித்தார்.
ஆரம்பம் முதலே காங்கிரஸில் இருந்து வந்த சி.கே.குப்புசாமி பின்னர் மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸில்இணைந்தார். நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்து வந்தார்.
இந் நிலையில் கோவைக்குப் பிரச்சாரத்திற்கு ஜெயலலிதா வந்தபோது அவர் முன்னிலையில் அதிமுகவில்இணைந்தார்.












Click it and Unblock the Notifications