ப.சிதம்பரம் கொடும்பாவியும் எரிப்பு
சிவகங்கை:
வேறு கட்சி நடத்திக் கொண்டே காங்கிரசில் தனக்கு சிவகங்கை தொகுதியை வாங்கிவிட்ட ப.சிதம்பரத்தை எதிர்த்துஅவரது கொடும்பாவியையும் காங்கிரஸ் தொண்டர்கள் எரித்தனர். இதையடுத்து 45 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுவரை கமல்நாத்தின் உருவப் பொம்மையை மட்டுமே எரித்து வந்த தொண்டர்கள் மத்தியில் இப்போதுசிதம்பரம் எதிர்ப்பும் உருவாகிவிட்டது.
அவர் நடத்தி வரும் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை, காங்கிரசில் இணைத்தால் அவருக்கு சீட் தருவதில்தனக்கு ஆட்சேபணை இல்லை என கட்சியின் மாநிலத் தலைவர் வாசன் டெல்லி தலைமையிடம் தெரிவித்திருந்தார்.
ஆனால், கட்சியை இணைக்க மாட்டேன் என்று கூறிவிட்ட சிதம்பரம், வேறு வழிகளில் நெருக்கடி தந்துசிவகங்கையைத் தட்டிவிட்டார். இதில் அவரோ அல்லது அவரது மகன் கார்த்திக்கோ போட்டியிட முடிவுசெய்துள்ளனர்.
இந் நிலையில் அந்தத் தொகுதியின் காங்கிரஸ் தொண்டர்களும், இப்போதைய எம்.பி. சுதர்சன நாச்சியப்பனின்ஆதரவாளர்களும் சுமார் 50 பேர் கூடி சிதம்பரத்தின் உருவப் பொம்மையை எரித்தனர். இதையடுத்து அவர்களில்45 பேர் கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications