புதுவை ஆளுநர் மீது விசாரணை: தேர்தல் ஆணையத்திற்கு மார்க்சிஸ்ட் கோரிக்கை
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி பா.ஜ.க. வேட்பாளர் லலிதா குமாரமங்கலத்திற்கு விருந்து கொடுத்ததன் மூலம், தேர்தல் நடத்தைவிதிமுறையை துணை நிலை ஆளுநர் என்.என்.ஜா மீறியுள்ளார். அவரிடம் விசாரணை நடத்துமாறு தேர்தல்ஆணையத்திற்கு புதுவை பிரதேச மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையர் டாண்டனுக்கு முருகன் அனுப்பியுள்ள கடிதத்தில்,புதுவை பா.ஜ.க. வேட்பாளர்லலிதா குமாரமங்கலத்திற்கு ஆளுநர் என்.என்.ஜா விருந்து கொடுத்துள்ளார். இந்த விருந்தில், மாநிலத்தைச் சேர்ந்தபல்வேறு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் மூலம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ளார் ஜா. எனவே அவர் மீது விசாரணை நடத்திபதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பாத்ரூமில் வழுக்கி விழுந்து அடிபட்டு, புதுவை அரசு மருத்துவமனையில் என்.என்.ஜா அனுமதிக்கப்பட்டிருப்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications