காவிரி நீர் கிடைக்காததற்கு ஜெ. அரசின் தவறான அணுகுமுறையே காரணம்: திமுக
மதுரை:
ஜெயலலிதா அரசின் தவறான அணுகுறை காரணமாகவே காவிரி நீர் தமிழகத்திற்குக் கிடைக்கவில்லை என்று திமுகபொருளாளர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.மோகனை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில்திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் வரதராஜன்,மதுரை மேயர் செ.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஆற்காடு வீராசாமி பேசுகையில், ஜெயலலிதா அரசு செயல்படாத அரசு என்று பெயர் பெற்றுள்ளது.செயல்படாத முதல்வர் என்ற பெருமையை ஜெயலலிதா பெற்றுள்ளார். தமிழக வரலாற்றில் செயல்படாத, மக்கள்செல்வாக்கு இல்லாத தலைவர் என்ற பெயரைப் பெற்ற முதல் முதல்வர் ஜெயலலிதாதான்.
ஜெயலலிதா அரசின் அடாவடியான, தவறான அணுகுமுறை காரணமாகவே காவிரி நீரை தமிழகத்தினால் பெறமுடியவில்லை. வழக்கு மேல் வழக்குப் போட்டு தமிழக, கர்நாடக நல்லுறவையே சீர் குலைத்து விட்டது அதிமுகஆட்சி என்றார் அவர்.












Click it and Unblock the Notifications