பெர்னாண்டஸ் தான் அடுத்த பிரதமர்: மக்கள் கூட்டணி
சென்னை:
பிரதமர் வேட்பாளராக ஜார்ஜ் பெர்னாண்டஸை அறிவிக்க மக்கள் கூட்டணி முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் தலித் கட்சிகளான விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் மற்றும் மக்கள் தமிழ் தேசம், இந்திய தேசியலீக் ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் கூட்டணி என்ற பெயரில் தேர்தல் களத்தை சந்திக்கின்றன.
ஐக்கிய ஜனதாதளத்தின் சின்னமான அம்பு சின்னத்தில் இக்கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். இந்நிலையில் தங்களது கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ஜார்ஜ் பெர்னாண்டஸை அறிவிக்க இவர்கள் முடிவுசெய்துள்ளனர்.
பிரதமர் வாஜ்பாய், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரிசையில் பிரதமராகும் முழு தகுதியும்பெர்னாண்டஸுக்கு இருப்பதாக மக்கள் கூட்டணி தலைவர்கள் பிரசாரம் செய்யவுள்ளனர். இது தொடர்பானமுறையான அறிவிப்பை ஏப்ரல் 27ம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில்வெளியிடவுள்ளனர்.
ராமநாதபுரம் பொதுக் கூட்டத்தில் கண்ணப்பன் வேட்பாளராக அறிமுகப்படுத்தப்படவுள்ளார். அவரை ஜார்ஜ்பெர்னாண்டஸ் அறிமுகப்படுத்தி கூட்டத்தில் பேசுகிறார். இந்தக் கூட்டத்தில் திருமாவளவன், டாக்டர் கிருஷ்ணசாமிஉள்ளிட்டோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.