சென்னை வழக்கறிஞர்களை எதிர்த்து மதுரை வழக்கறிஞர்கள் இன்று போராட்டம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை உயர் நீதிமன்றக் கிளையை எதிர்த்து போராட்டம் நடத்தி வரும் சென்னை உயர் நீதிமன்றவழக்கறிஞர்களைக் கண்டித்து மதுரை நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று முதல் 2 நாட்களுக்கு தர்ணா போராட்டம்நடத்த முடிவு செய்துள்ளனர்.

மதுரை உலகநேரியில் கட்டப்பட்டுள்ள உயர் நீதிமன்றக் கிளை ஏப்ரல் 13ம் தேதி திறக்கப்படவுள்ளது. உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி இதை உறுதிப்படுத்தி அறிவித்துள்ளார். இந் நிலையில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையைத் திறக்க சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மதுரையில் உயர் நீதிமன்றக் கிளையைத் திறந்தால், சென்னை வழக்கறிஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றுஅவர்கள் கூறுகிறார்கள். இதை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள்.

இதனால் கொதிப்படைந்துள்ள மதுரை நீதிமன்ற வழக்கறிஞர்கள், சென்னை வழக்கறிஞர்களைக் கண்டித்து இன்றுமுதல் இரண்டு நாட்களுக்கு நீதிமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

சென்னை வழக்கறிஞர்கள் உடனடியாக தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தென்மாவட்ட வழக்கறிஞர்களைத் திரட்டி மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள்எச்சரித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+