ஆளுநரை மாற்ற புதுவை காங். கோரிக்கை
பாண்டிச்சேரி:
தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறாக பா.ஜ.க. வேட்பாளரை அதிகாரிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்ததுணைநிலை ஆளுநர் என்.என். ஜா உடனடியாக மாற்றப்பட வேண்டும் என்று புதுவை காங்கிரஸ் தலைவர்நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 22ம் தேதி புதுவையில் நடந்த அரசு விழாவில் என்.என்.ஜா விருந்து கொடுத்தார். அதில் பா.ஜ.க.வேட்பாளர் லலிதா குமாரமங்கலம் கலந்து கொண்டார்.
அப்போது அவரை அதிகாரிகளுக்கு ஆளுநர் ஜா அறிமுகப்படுத்தி வைத்தது பெரும் சர்ச்சையைஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் நாராயண சாமி, தேர்தல்நடத்தை விதிமுறைகளை மீறி பா.ஜ.க. வேட்பாளரை அதிகாரிகளுக்கு அறிகப்படுத்தி வைத்துள்ளார் ஆளுநர்ஜா.
அவரது நடவடிக்கை கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. எனவே அவரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரிதேர்தல் ஆணையம், குடியரசுத் தலைவர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார் அவர்.
பேட்டியின்போது, பாமக தலைவர் ஜி.கே.மணி, பாண்டிச்சேரி திமுக தலைவர் ஆர்.வி.ஜானகிராமன், பாமகவேட்பாளர் பேராசிரியர் ராமதாஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.