ராமதாசுக்கு எதிராய் நடிகர் ஆனந்த்ராஜ்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி மக்களவைத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு பாமக விட்டுக் கொடுக்க வேண்டும் .இல்லையென்றால் நானே சுயேட்சையாக அங்கு போட்டியிடுவேன் என்று நடிகர் ஆனந்தராஜ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
பாமக வேட்பாளர் ராமதாஸ் புதுவையைச் சேர்ந்தவர் என்றாலும் பாமகவை புதுவை மக்கள் ஏற்றுக் கொள்ளதயாராக இல்லை. அதே போல் பா.ஜ.க. வேட்பாளர் லலிதா குமாரமங்கலம் புதுவை தொகுதிக்குத்தொடர்பில்லாதவர்.
கடந்த தேர்தலில் பாமகவுக்கு ஓட்டு போடாதீர்கள் என்று கூறிய காங்கிரசார் இப்போது, ஓட்டு போடுங்கள் என்றுசொல்கின்றனர். இதற்குக் காரணம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
அவருக்கு ஏன் பாண்டிச்சேரி மீது ஏன் இவ்வளவு ஆசை? அப்படி என்ன இருக்கிறது இங்கு? ஏன் புதுவைமக்களை ஆட்டிப்படைக்க நினைக்கிறார்?
புதுவை மக்களின் வேண்டுகோள் என்ன என்பதை ராமதாஸ் உணர்ந்து, கூட்டணிக் கட்சிக்கு இந்த தொகுதியைவிட்டுக் கொடுக்க வேண்டும்.
எனவே, மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து பாண்டிச்சேரியை காங்கிரசுக்கு விட்டுத் தர ராமதாஸ் முன் வரவேண்டும். இல்லை, அது முடிந்து போன கதை. அதைப்பற்றி பேச வேண்டாம் என்று கூறினால் புதுவை மக்களின்போர்வாளாக, தளபதியாக இந்த தேர்தலில் நானே சுயேட்சையாக போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
புதுவை மக்களுக்கு பரிச்சயமானவன் என்பதாலும், மக்களே என்னை நிறுத்துகிறார்கள் என்பதாலும் நூறு சதவீதம்நான் வெற்றி பெறுவேன். நான் போட்டியிட்டால் ரஜினியின் குறிக்கோளும், என் குறிக்கோளும் ஒன்றாகஇருக்கும் என்று அவர் கூறினார்.
ஆனந்தராஜ் பாண்டிச்சேரியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவர் காஙகிரஸ் கட்சியில் எந்தப்பதவியிலும் இல்லை. இப்போது ராமதாஸை ரஜினி எதிர்த்து வருவதால், அவருடன் சேர்ந்து வாய்ஸ் தந்தால்தனக்கும் கொஞ்சம் பெயர் கிடைக்கும் என ஆனந்தராஜ் நினைப்பதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications