பெங்களூரிலிருந்து ரஜினி இன்று சென்னை வருகை
சென்னை:
பெங்களூரில் ஓய்வு எடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்புகிறார். ரசிகர் மன்றத் தலைவர்சத்யநாராயண ராவ் உள்ளிட்ட முக்கிய மன்ற நிர்வாகிகளுடன் அவர் தீவிர ஆலோசனை நடத்தவுள்ளார்.
காவிரிப் பிரச்சினை, பாபா படப் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளில் பாமக நடந்து கொண்ட விதத்தால்கோபமடைந்துள்ள ரஜினிகாந்த், அதற்குப் பழி வாங்கும் விதமாக பாமக போட்டியிடும் 6 தொகுதிகளில் மட்டும்அதிமுக, பா.ஜ.கவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார். மற்ற தொகுதிகள் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
ரஜினியின் ஆதரவு குறித்து தமிழக அரசியல் களத்தில் பலமான விவாதம் எழுந்திருக்கும் வேளையில் தற்போதுஅவர் பெங்களூரில் ஓய்வு எடுத்து வருகிறார். இன்று சென்னை திரும்புகிறார்.
சென்னை வந்ததும், சத்யநாராயண ராவுடன் அவர் முக்கிய ஆலோசனையில் ஈடுபடுகிறார். பின்னர் மற்றதொகுதிகளின் மன்ற நிர்வாகிகளையும் அவர் சந்திக்கவுள்ளார். அப்போது 6 தொகுதி தவிர மற்ற தொகுதிகளில்யாரை ஆதரிப்பது என்பது குறித்து ரஜினி முடிவு எடுப்பார் என்று தெரிகிறது.
இதற்கிடையே, ரஜினியை 6 தொகுதிகளில் மட்டுமல்லாது அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக கூட்டணிக்குஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுத்த பா.ஜ.க. தரப்பு கடுமையாக முயற்சித்து வருகிறது. அத்தோடு இல்லாமல்,கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் அவரை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுத்த பா.ஜ.க.விரும்புகிறது. அப்படிச் செய்தால் கொத்தாக பல சீட்டுகளை அள்ள முடியும் என்று அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
பா.ஜ.கவின் பாச்சா "பாட்ஷா"விடம் பலிக்குமா?












Click it and Unblock the Notifications