ரஜினி ஆதரவால் வெற்றி உறுதி: பா.ஜ.க. வேட்பாளர் நம்பிக்கை
சென்னை:
சிதம்பரம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராகப் போட்டியிடும் தடா பெரியசாமி, ரஜினி கொடுத்துள்ள ஆதரவால்தனது வெற்றி உறுதியாகி விட்டதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் (தனி) தொகுதியில் பா.ஜ.க. சார்பில் தடா பெரியசாமி என்பவர் போட்டியிடுகிறார். இத்தொகுதியில்ரஜினி ரசிகர்கள் தடா பெரியசாமிக்காக கடுமையான பிரசாரத்தை தொடங்கியுள்ளார்கள்.
இந் நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தடா பெரியசாமி, ரஜினி ரசிகர்களின் ஆதரவுகாரணமாக தனது வெற்றி உறுதியாகி விட்டதாக தெரிவித்தார். அவர் கூறுகையில், சிதம்பரம் தொகுதியில் எனக்குஎதிராக திருமாவளவன் போட்டியிடப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் நிச்சயம் என்னை எதிர்த்து அவர்போட்டியிட மாட்டார். போட்டியிட்டால் அவருக்கு தோல்வி நிச்சயம்.
சிதம்பரத்தில் எனக்கும், பாமகவுக்கும் இடையேதான் போட்டி. பாமக வேட்பாளர் பொன்னுச்சாமியை சிதம்பரம்மக்கள் பார்த்தே பல காலமாகி விட்டது. கடந்த முறை வெற்றி பெற்ற கையோடு தொகுதியை மறந்து விட்டுப்போனவர் அவர்.
மேலும், சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட ரஜினி ரசிகர்கள் எனக்கு முழுமையாக ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.மொத்தம் உள்ள 893 ரசிகர் மன்றங்களும் என்னை ஆதரித்து தீர்மானம் போட்டுள்ளன. எனவே எனது வெற்றிஉறுதி என்றார் அவர்.












Click it and Unblock the Notifications