கைது செய்தால் அதிமுகவுக்கு டெபாஸிட் கூட கிடைக்காது: ராமதாஸ்
மதுரை:
என்னைக் கைது செய்தால் அதிமுகவுக்கு ஒரு தொகுதியில் கூட டெபாஸிட் கிடைக்காது என்று பாமக நிறுவனர்ராமதாஸ் கூறியுள்ளார்.
இன்று மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:-
நான் நாகர்கோவில் திசையன்விளை, நெல்லை, கடையநல்லூர், ராஜபாளையம், முதுகுளத்தூர் ஆகிய பகுதிகளில்கடந்த 2 தினங்களாக பிரசாரம் செய்தபோது எந்த பிரச்சினையும் இல்லை.
மதுரை வந்தபோது அண்ணா சிலை அருகே பத்து பதினைந்து பையன்கள் போலீஸ் பாதுகாப்போடு கறுப்புக்கொடிகாட்டுவதைப் பார்த்தேன்.
போலீசார் திட்டமிட்டே இந்தப் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளனர். போலீசாரே நேரடியாக எனக்கு கறுப்புக்கொடிகாட்டி இருக்கலாம். விருதுநகரில் திமுக மாநாட்டில் கூட போலீசார் இப்படித்தான் நடந்து கொண்டனர்.
அதிமுகவினர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததை தேர்தல் ஆணையத்திடம் பாமக தலைவர் ஜி.கே.மணி புகார்செய்ய உள்ளார்.
எஸ்மா, டெஸ்மா போன்ற சட்டங்கள் மூலம் எல்லா தலைவர்கள் மீதும் பொய் வழக்கு போட்டது போலவே என்மீதும் வழக்கு போட்டுள்ளனர்.
என்னை போலீஸார் கைது செய்தால் மகிழ்ச்சிதான். அவ்வாறு கைது செய்தால் 40 இடங்களிலும் அதிமுகவுக்குடெபாசிட் கூட கிடைக்காது என்றார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications