மத உணர்வை தூண்டும் டிவி தேர்தல் விளம்பரங்களுக்கு உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி:
மத உணர்வை தூண்டும் மற்றும் தனிப்பட்ட முறையில் தரக்குறைவான விமர்சனங்களைக் கொண்டவிளம்பரங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தொலைக்காட்சிகளில் தேர்தல் விளம்பரங்கள் செய்வது தடை செய்யப்பட்டு இருக்கிறது. இதை எதிர்த்து ஆந்திரமாநில ஐகோர்ட்டில் தனியார் டெலிவிஷன் சேனல்கள் சார்பாக வழக்கு தொடரப்பட்டது.
தனிப்பட்ட முறையில் தலைவர்களை விமர்சிக்கும் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுதேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்தது. ஆனால், தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் மத்திய தகவல்இலாகா நடவடிக்கை இருக்கலாம் என்று கூறியது.
இந் நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை சார்பில் அட்டார்னி ஜெனரல் சோலி சொராப்ஜிமனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில்,
தொலைக்காட்சி நிறுவனங்கள் லாப நோக்கில் திரித்துக் கூறப்படும் அரசியல் விளம்பரங்களை ஒளிபரப்பிக்கொண்டு இருக்கின்றன. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனுவை தலைமை நீதிபதி வி.என்.காரே தலைமையில் நீதிபதி சின்கா, நீதிபதி கபாடியா ஆகியோர் கொண்டபெஞ்ச் விசாரித்தது. தொலைக்காட்சிகளில் தனிப்பட்ட முறையில் தரக்குறைவாக விமர்சிக்கும் மற்றும் மதஉணர்வுகளை தூண்டும் அரசியல் விளம்பரங்கள் ஒளிபரப்ப தடைவிதித்து நீதிபதிகள் இடைக்கால உத்தரவுபிறப்பித்தனர்.
இந்த வழக்கு தொடர்பான மறு விசாரணை 5ம் தேதி நடைபெறும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications