அண்ணாச்சி ராஜகோபால்- ஜீவஜோதி வழக்கில் 16ம் தேதி தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தனது கணவர் பிரின்ஸ் சாந்தக்குமாரை சரவணபவன் ஹோட்டல் அதிபர் கடத்திச் சென்று கொலை செய்துவிட்டதாக ஜீவஜோதி தொடர்ந்த வழக்கில் வரும் 16ம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

சென்னை வேளச்சேரியில் வசித்து வந்த தனது கணவர் சாந்தக்குமாரை ராஜகோபால் கடத்திச் சென்று கொலைசெய்து விட்டதாக அவரது மனைவி ஜீவஜோதி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் ராஜகோபால் உள்ளிட்ட 9பேரைக் கைது செய்தனர்.

இவர்கள் மீதான வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

ஜீவஜோதிக்கும் ராஜகோபாலுக்கும் இருந்த தொடர்புகள் குறித்து சந்தி சிரிக்கும் அளவுக்கு விவரங்கள்வெளிவந்துவிட்டன.

இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் பலரும் பல்டி அடித்துள்ளனர். ஜீவஜோதி, ராஜகோபால் ஆகியோர் கடந்தமாதம் தங்களது சாட்சியத்தைப் பதிவு செய்தனர். ராஜகோபாலும், குற்றம் சாட்டப்பட்ட மற்ற 8 பேரான டேணியல்,காசி, ஹூசேன், கார்மேகம், தமிழ் செல்வன், பட்டுராஜன், சேது, முருகானந்தம் ஆகியோர் தாங்கள்குற்றமற்றவர்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து கடந்த மாதம் 22ம் தேதி பிரபல தடவியல் நிபுணர் டாக்டர் சந்திரசேகர் ராஜகோபாலுக்கு ஆதரவாகசாட்சியம் அளித்தார். இந்த வழக்கில் வழக்கறிஞர்களின் வாதங்கள் இன்று முடிந்ததையடுத்து, வழக்கின் தீர்ப்பைவரும் 16ம் தேதி வழங்குவதாக நீதிபதி செல்வக்குமார் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+