இன்று பிரசாரத்தை தொடங்கும் ஜி.கே.வாசன்
சென்னை:
காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் இன்று முதல் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார்.
தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களில் நெல்லை தவிர மற்ற தொகுதிகளின்வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. நெல்லை விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இந் நிலையில் இன்று முதல் தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் ஜி.கே.வாசன். இன்று மாலை சென்னைஅருகே உள்ள மாங்காடு பகுதியிலிருந்து பிரசாரத்தைத் தொடங்குகிறார் வாசன். பின்னர் பூந்தமல்லியில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இரவு 8 மணிக்கு சென்னை சிந்தாதிரிப்பேட்டை சிங்கண்ணா தெருவில் நடக்கும் பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில்உரையாற்றுகிறார். இக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலினும் கலந்து கொள்கிறார். மத்தியசென்னை, வட சென்னை, தென் சென்னை திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக இந்தக் கூட்டத்தில் வாசன் வாக்குசேகரிக்கிறார்.