தமிழகத்தில் வாக்களிக்கும் நேரம் அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் ஓட்டுப் போடுவதற்கான நேரம் 1 மணி நேரம் அதிகரிக்கப்படவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல்அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கி தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
வாக்களிப்பதற்கான கால அவகாசத்தை கூடுதலாக்க அனைத்துக் கட்சிகள் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது.இதை ஏற்று 1 மணி நேரம் அதிகரிக்கப்படுகிறது. இதன்படி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரைவாக்காளர்கள் ஓட்டுப் போடலாம்.
வேட்பாளர்களின் தேர்தல் செலவு தற்போது ரூ. 15 லட்சமாக உள்ளது. இதை ரூ. 25 லட்சமாக அதிகரிக்கவும்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
வாக்குச் சாவடிகளில் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் ஏஜென்டுகளாக செயல்பட அனுமதிகிடையாது என்றார் சாரங்கி.












Click it and Unblock the Notifications