For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போட்டியிட்டே தீருவேன், பயந்து ஓட மாட்டேன்: ரோஜா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

நகரி தொகுதியில் எனக்கு எதிர்ப்புகள் இருந்தாலும் பயந்து ஓட மாட்டேன். நிச்சயம் போட்டியிட்டே தீருவேன்என்று நடிகை ரோஜா கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலம் நகரி சட்டசபை தொகுதியின் தெலுங்கு தேசம் வேட்பாளராக ரோஜா அறிவிக்கப்பட்டுள்ளார்.இதற்கு அத் தொகுதியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ரோஜா வேட்பு மனுத் தாக்கல் செய்ய வந்தபோது மிகப்பெரிய கலவரமே நடந்தது. போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய அளவுக்கு பிரச்சினை பெரிதானது.

இந்த சம்பவங்களால் ரோஜா அதிர்ச்சியடைந்துள்ளார். இருப்பினும் தான் போட்டியிலிருந்து விலகப் போவதில்லைஎன்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், என்னை எதிர்த்து வன்முறையில்ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். திட்டமிட்டே இந்த கலவரத்தைஉண்டு பண்ணியிருக்கிறார்கள்.

அரசியலில் கொட்டை போட்ட சில தெலுங்கு தேசம் புள்ளிகள்தான் எனது அரசியல் பிரவேசத்தைவிரும்பவில்லை. அவர்கள்தான் போராட்டத்தைத் தூண்டி விட்டுள்ளனர்.

இதற்காக நான் பயப்படப் போவதில்லை. கட்டாயம் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவேன் என்றார் ரோஜா.

ரோஜா போட்டியிடும் நகரி தொகுதி தமிழக எல்லைப் பகுதியில் உள்ளது. இங்கு வசிப்போரில் பாதிக்கும்மேற்பட்டோர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X