டெல்லி வங்கியில் கொள்ளை முயற்சி: திருச்சியைச் சேர்ந்த 15 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
டெல்லியில் உள்ள வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த திருச்சியைச் சேர்ந்த 15 பேரை டெல்லிபோலீஸார் கைது செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ஒரு வங்கி அருகே 15 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில்நின்றிருந்தனர். இது குறித்து போலீஸாருக்குத் தகவல் போனது.
போலீஸார் விரைந்து வந்து அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் திருச்சியைச் சேர்ந்தவர்கள்என்றும் வங்கியில் கொள்ளையடிக்கத் திட்டமிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த நாட்டுத் துப்பாக்கிகள் மற்றும் வெடிபொருட்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications