ஏ.கே.47 ஊழல்: அத்வானி பதவி விலக காங்கிரஸ் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இந்திய ராணுவத்திற்கு ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை வாங்கியதில் துணைப் பிரதமர் அத்வானிக்கு தொடர்புஉள்ளது. இந்தப் புகாரை ஏற்று அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ரஷிய நிறுவனம் ஒன்று 25 சதவீதம் குறைந்த விலையில்ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை தயாரித்துத் தருவதாக கூறியிருந்தது. ஆனால் அதை நிராகரித்து விட்டு, துப்பாக்கிதயாரிக்கும் உரிமம் கூட பெறாத பல்கேரிய நிறுவனம் ஒன்றிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் துப்பாக்கிகளைவாங்கும் ஆர்டரைக் கொடுத்துள்ளது.

எனவே துப்பாக்கி வாங்கியதில் பெருமளவு ஊழல் நடந்திருக்கும் என்ற சந்தேகம் வலுக்கிறது. இதற்குமுற்றுப்புள்ளி வைக்க அத்வானி உடனடியாக தனது துணைப் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ரூ. 1 லட்சம் கோடி அளவுக்கு பாதுகாப்புத்துறையில் ஊழல் நடந்துள்ளது. இவர்களை ஆட்சியில் தொடர விட்டால் நாட்டுக்கு பேராபத்தாகி விடும் என்றார்ஜெயந்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+