For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை: பெண் வேடமிட்டு மனைவியை கொடுமைப்படுத்திய கணவன்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பெண் வேடமிட்டு, வரதட்சணை கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்திய வித்தியாச கணவரை போலீஸார்கைது செய்துள்ளனர்.

சென்னை நம்மாழ்வார்பேட்டையைச் சேர்ந்தவர் திரவியம். இவரது மனைவி காமாட்சி. இருவரும் ஆசிரியர்கள்.சமீப காலமாக திரவியத்தின் போக்கில் மாற்றம் தென்பட்டுள்ளது.

திடீரென்று புடவை, ஜாக்கெட் ஆகியவற்றைப் போட்டுக் கொண்டு மனைவியை கொடுமைப்படுத்தத்தொடங்கியுள்ளார். கூடுதலாக வரதட்சணை கொண்டு வருமாறு கூறி சித்திரவதைப்படுத்தியுள்ளார்.

கணவரின் நூதன கொடுமையால் அதிர்ச்சியடைந்த காமாட்சி, தலைமைச் செயலக அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரைப் பதிவு செய்த போலீஸார் திரவியத்தைக் கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

திரவியம் பயன்படுத்தியதாகக் கூறப்படும் 60 புடவைகள், ஜாக்கெட்டுகளையும் போலீஸார் பறிமுதல்செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக திரவியத்தின் உறவினர்கள் 6 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X