பழனி: இழுவை ரயில் அறுந்து, உருண்டு 32 பேர் காயம்
பழனி:
பழனியில் இழுவை ரயில் (விஞ்ச்) அறுந்து, தாறுமாறாக பின்நோக்கி ஓடி, கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 32பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையில் உள்ள முருகன் கோவிலுக்குச் செல்ல இழுவை ரயில் வசதி உள்ளது. இதன்மூலம் தினமும் ஏராளமான பயணிகள் மலைக் கோவிலுக்கு சென்று வருகிறார்கள். விரைவில் மலைப் பகுதிக்குரோப் கார் வசதியும் கொண்டு வரப்படவுள்ளது,
இந் நிலையில் இன்று காலை இழுவை ரயில் அடிவாரத்திலிருந்து மலைக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போதுஎதிர்பாராத விதமாக இரும்புக் கயிறு அறுந்தது. இதில் இழுவை ரயில் பெட்டி மலைப்பாதை பின்நோக்கிதாறுமாறாக ஓடியது. தண்டவாளத்தை விட்டு விலகி கவிழ்ந்து, பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.
இதில் பெட்டியில் பயணம் செய்த 32 பக்தர்கள் காயமடைந்தனர். தீயணைப்புப் படையினர் உடனடியாக விரைந்துவந்து பெட்டிக்குள் சிக்கிக் கொண்ட பக்தர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பள்ளத்தில் சிக்கியதால் அந்தப் பெட்டி மலையில் இருந்து உருண்டு தரையில் மோதாமல் தப்பியது. இதனால்பயணிகளும் உயிர் தப்பிவிட்டனர்.
இந்த விபத்து பழனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.