சோனியா பிரதமராவதில் ஆட்சேபமில்லை: வைகோ
திருநெல்வேலி:
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால், அதை மதிமுக முழு மனதுடன்ஆதரிக்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மத்தியில் காங்கிரஸ் தலைமையில் மதச்சார்பற்றஆட்சி அமைந்து, அந்த அரசுக்கு சோனியா காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அதை முழு மனதுடன்மதிமுக வரவேற்கும்.
எதிர்க்கட்சித் தலைவராக சிறந்த முறையில் செயல்பட்டுள்ளார் சோனியா காந்தி. அவரது பேச்சுக்கள்,நடவடிக்கைகளை ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் நான் பலமுறைகவனித்திருக்கிறேன். அவரால் ஆட்சி நிர்வாகத்தை சிறந்த முறையில் நடத்த முடியும் என்று உறுதியாக நம்புகிறேன்.
என் மீதான பொடா வழக்கை வாபஸ் பெறுவது குறித்து அரசு கொண்டுள்ள நிலை குறித்து எனக்குக்கவலையில்லை. அந்த நிலை தொடருமானால் மதிமுகவின் சட்டப் பிரிவு கூடி இது தொடர்பாக முடிவெடுக்கும்என்றார் அவர்.












Click it and Unblock the Notifications