தமிழகத்தில் ஜெ எதிர்ப்பு அலை தீவிரம்: வாசன்
பண்ருட்டி:
தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவுக்கு எதிரான மிக பலமான அலை வீசுகிறது என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் வாசன் கூறினார்.
கடலூர் திமுக வேட்பாளர் வேங்கடபதியை ஆதரித்து பிரச்சாரம் செய்த வாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 7ம் தேதி முதல் ஏழு நாட்களாக பல பகுதிகளில் பிரச்சாரம் செய்த்ேன். போகும் இடமெல்லாம் மக்கள் ஏராளமாகத் திரள்கின்றனர். மக்களின் எழுச்சியை கண் கூடாகவே பார்க்க முடிகிறது. ஜெயலலிதாவுக்கு எதிரான மிக பலமான அலை வீசுவதை உணர முடிந்தது.
இதனால் பெரும் வெற்றி பெறுவோம் என்ற உறுதியான நம்பிக்கை வந்துவிட்டது. சோனயாவைப் பற்றி ஜெயலலிதா அவதூறாகப் பேசப் பேச, அது அவருக்கே எதிராக திரும்பிக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் பேச்சு அவரது சொந்த வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டுகிறது.
ஜெயலலிதா போன்றவர்கள் முதல்வர் பதவியில் இருக்கவே பொருத்தமானவர் கிடையாது. 50 ரூபா சேலைக்காக உயிரையே விடும் ஏழைப் பெண்கள் வாழும் இந்த தேசத்தைத் தான் இந்தியா ஒளிர்கிறது என்று வசனம் கண்டுபிடித்து அதைத் திரும்பத் திரும்பத் சொல்லிக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.
வீராணத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதாக ஜெயலலிதா சொல்வது தேர்தல் நேரத்து பேச்சு. தேர்தல் வரை மக்களை ஏமாற்றுவதற்காக ஜெயலலிதா சொல்லும் புளுகுகளில் இதுவும் ஒன்று என்றார்.












Click it and Unblock the Notifications