திமுக வெற்றிக்காக சுண்டுவிரலை வெட்டிய தொண்டர்
சீர்காழி:
சீர்காழி அருகே திமுக கூட்டணி வெற்றிக்காக அக்கட்சித் தொண்டர் தனது சுண்டு விரலை வெட்டிக் கொண்டார்.
சீர்காழி அருகே உள்ள நிம்மேலி கிராமத்தைச் சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர் செல்வம் (28). இக்கிராம திமுகஇளைஞர் அணிச் செயலாளராக இவர் உள்ளார்.
கிராமத்தின் கடை வீதியில் அதிமுக தொண்டர் ஒருவர், அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றுகூறினார். இதைக் கேட்டு கோபமடைந்த செல்வம், திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்று ஆவேசமாகக்கூறியபடி, இடது கை சுண்டு விரலை அரிவாளால் வெட்டினார்.
இதனால் விரல் துண்டானது. அருகிலிருந்தவர்கள் உடனே அவரை மருத்துமனையில் கொண்டு சேர்த்தனர்.
கடந்த மாதம் அதிமுகவின் தேர்தல் வெற்றிக்காக சேலத்தைச் சேர்ந்த ஏட்டு ரத்தினம் என்பவர் தனது 3விரல்களையும், வள்ளியூரைச் சேர்ந்த கணேசன் என்பவர் தனது 2 விரல்களையும் துண்டித்துக் கொண்டதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications