கருணாவால் கொல்லப்பட்ட புலிகளின் உளவுப் பிரிவினர்
கொழும்பு:
புலிகளின் தாக்குதலையடுத்து தப்பியோடிய கருணாவின் படையினர், புலிகளின் உளவுப் பிரிவினர்5 பேரையும் பிரபாகரனின் ஆதரவாளர் ஒருவரையும் சுட்டுக் கொன்றுள்ள விவரம் இப்போதுவெளியாகியுள்ளது.
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட உளவுப் பிரிவின் துணைத் தலைவர் நீலன்சின்னதம்பி என்பவரை கருணா சுட்டுக் கொன்றுள்ளார்.
அதே போல தமிழ்ஈழன், மாவேந்தன், நம்பி, வர்ணகீதன் ஆகிய விடுதலைப் புலிகளின் உளவுப்பிரிவினரையும், புலிகளின் ஆதரவாளரான மோகன் என்பரையும் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இவர்களை மீனகம் முகாமுக்கு பேச்சுவார்த்தைக்காக அழைத்த கருணா, பின்னர் நீலனை மட்டும்தனியே பிரித்து கைவிலங்கிட்டு சிறைப்படுத்தியுள்ளார். அவரைத் தாக்கி விசாரணை நடத்தியகருணா, கடைசியில் தப்பியோடும்போது மருதம் முகாமில் வைத்து சுட்டுக் கொன்றுள்ளார்.
அப் பகுதியை புலிகள் கைப்பற்றியபின் உள்ளே சோதனையிட்டபோது, கைவிலங்கிடப்பட்டு,கண்கள் கட்டப்பட்ட நிலையில் நீலன் இறந்து கிடந்தார்.
நீலனின் உடல் இன்று பொது மக்கள் பார்வைக்காக மட்டக்களப்பு பள்ளியில் வைக்கப்பட்டிருந்தது.விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத் தளபதிகள் உள்பட ஏராளமான பொது மக்கள் அவரதுஉடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் வன்னி பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு மாவீரர் சமாதியில் அடக்கம்செய்யப்படவுள்ளது.
அதே போல கொல்லப்பட்ட மற்ற 4 உளவுப் பிரிவினரின் உடல்களும் தண்டியடி மாவீரர்சமாதியில் அடக்கம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications