பொடா வழக்கு விசாரணையை நிறுத்த கோரி வைகோ மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கக் கோரிமதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனுத் தாக்கல் செய்துள்ளார்.

2002ம் ஆண்டு திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காகவைகோ, மதுரை கணேசன், அழகு சுந்தரம், கணேசமூர்த்தி, வீர இளவர சன், பூமிநாதன், மணியம், செவந்தியப்பன்,நாகராஜன் ஆகிய மதிமுகவினர் 9 பேர் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீதான வழக்கு பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றம் சாட்டப்பட்டஅனைவரும் இப்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

கடந்த வாரம் பொடா மறு ஆய்வுக்குழு, வைகோ உள்பட 9 பேர் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர்ந்ததுதவறு என்று தீர்ப்பு வழங்கியது. இந் நிலையில் வைகோ உள்ளிட்ட 9 பேர் சார்பில் இன்று பூந்தமல்லி பொடாநீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வைகோ சார்பில் கொடுக்கப்பட்டுள்ள மனுவில்,

எங்கள் மீது தொடரப்பட்ட பொடா வழக்கிற்கு எந்த முகாந்தரமும் இல்லை என்று பொடா மறு ஆய்வுக்குழு தீர்ப்புவழங்கியுள்ளது. தமிழக அரசு இது குறித்து எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. எனவே பொடாவழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

கணேசன், அழகு சுந்தரம், கணேசமூர்த்தி ஆகியோர் கொடுத்துள்ள மனுவில், பொடா மறு ஆய்வுக்குழுவின் தீர்ப்புஅடிப்படையாகக் கொண்டு இந்த வழக்கில் இருந்து எங்களை விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மற்ற 5 பேர் கொடுத்துள்ள மனுவில், பொடா மறு ஆய்வுக்குழு தீர்ப்புப்படி பார்த்தால் இந்த வழக்கை விசாரிக்கஇந்த நீதிமன்றத்திற்கு அதிகாரமே இல்லை. எனவே இந்த வழக்கை உரிய நீதி மன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+