ரசிகர்களை சந்தித்தார் ரஜினி- வன்னியர் சங்கங்களுடன் இணைந்து போராட முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நேற்று பல்வேறு வன்னியர் அமைப்புகளின் தலைவர்களைச் சந்தித்து பா.ம.கவுக்கு எதிராக களத்தில்இறங்குவது குறித்து ஆலோசித்த நடிகர் ரஜினி, இன்று பா.ம.க. போட்டியிடும் 6 தொகுதிகளைச்சேர்ந்த ரசிகர்களைச் சந்தித்தார்.

Rajini Fans

ராமதாசுக்குக் கருப்புக் கொடி காட்டியற்காக கைது செய்யப்பட்ட ரஜினி ரசிகர்கள்
அப்போது வன்னிய சஙகத்தினருடன் இணைந்து பா.ம.கவுக்கு எதிராக செயல்படுவதற்கானதிட்டத்தை ரசிகர்களுக்கு ரஜினி வகுத்துக் கொடுத்துள்ளார்.

பா.ஜ.கவுக்கு ஆதரவு, பா.ம.கவுக்கு எதிர்ப்பு என்ற ரஜினியின் நிலையால் தமிழகத்தில் ரசிகர்கள்மத்தியில் மட்டுமின்றி மக்கள் மத்தியிலும் குழப்பம் நிலவுகிறது.

இவர் அதிமுகவை ஆதரிக்கச் சொல்கிறாரா இல்லையா என்று புரியாத நிலை உள்ளது. தனக்குஊழலும் வன்முறையும் பிடிக்காது என்று சொல்லும் ரஜினி அதிமுகவை எப்படி ஆதரிக்க முடியும்என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து அவர் வாசித்த அறிக்கைக்கு மக்கள் மத்தியில் அவ்வளவாகஆதரவும் காணப்படவில்லை. இதனால் பதற்றமடைந்துள்ள ரஜினி தரப்பு வேகமாக அடுத்தகாய்களை நகர்த்த ஆரம்பித்துள்ளது.

வலியப் போய் தந்த ஆதரவைக் கூட அதிமுகவுக்கு பயந்து பா.ஜ.க. சரியாக வரவேற்கவில்லைஎன்ற வலியும் ரஜினியை வாட்டுகிறது.

மேலும் ராமதாசுக்கு கருப்புக் கொடி காட்டி அடி வாஙகிய தனது ரசிகர்களையும் தமிழக அரசு கைதுசெய்து வழக்கு போட்டிருப்பது ரஜினிக்கு பெரும் அவமானத்தைத் தேடித் தந்துள்ளது.

அனுமதியின்றி பொது இடத்தில் கூடுதல், கறுப்புக் கொடி காட்ட முனைதல் என இந்திய தண்டனைச்சட்டத்தின் 143, 147, 188, 341, 342 ஆகிய பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் இப்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ராமதாசுக்கு எதிராக கொலை முயற்சி வழக்குப் போட்டதற்காக தமிழக அரசைத் தனியே பாராட்டியும்கூட போலீஸ் மூலம் ரசிகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதைக் கண்டுஎரிச்சலடைந்துள்ளார் ரஜினி.

இதனால் இனியும் அதிமுக-பா.ஜ.கவை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல் தானே நேரடியாககளத்தில் இறங்க முடிவு செய்துள்ளார்.

வன்னிய சமுதாய மக்களிடையே மிக பலமாக உள்ள பா.ம.கவை மற்ற கட்சிகளைப் போல எதிர்கொள்ள முடியாது என்பதால் வன்னிய இனத்தைச் சேர்ந்த ராமதாஸ் எதிர்ப்பாளர்களை ஒன்று திரட்டிஅவர்களுடன் ரசிகர்களைக் கைகோர்த்துவிட்டால் பா.ம.கவை மண் கவ்வ வைக்கலாம் என ரஜினிநினைக்கிறார்.

அதன்படி நேற்று பல்வேறு வன்னிய அமைப்புகளின் தலைவர்களான ஏ.கே. நடராஜன், தீரன்,ராம.சுகந்தன் உள்ளிட்டவர்களை நேரில் அழைத்துப் பேசினார் ரஜினி. தன்னை ஆதரிக்க வேண்டும்என அவர்களிடம் ரஜினி கோரிக்கை வைத்தார்.

இதையடுத்து அவர்களும் சில நிபந்தனைகளைப் போட்டுள்ளதாகத் தெரிகிறது. அதை ஏற்றுள்ளரஜினி, இன்று பா.ம.க போட்டியிடும் 6 தொகுதிகளைச் சேர்ந்த தனது ரசிகர்களையும் நேரில்சந்தித்துப் பேசினார்.

அப்போது வன்னிய சங்கங்களுடன் இணைந்து ரசிகர்கள் பா.ம.கவுக்கு எதிராக களம் இறங்குவதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது.

வன்னியர் சங்கங்கள்- ரசிகர்கள் கூட்டு முயற்சிக்கும் மக்களிடையே வரவேற்பு இல்லாமல் போனால்ரஜினியே நேரடியாக இந்த 6 தொகுதிகளிலும் பா.ம.கவுக்கு எதிராக பிரச்சாரத்தில் இறங்கக் கூடும்என்கிறது அவருக்கு நெருக்கமான வட்டாரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+