அன்னிய செலாவணி மோசடி: தினகரனுக்கு எதிராக பிடிவாரண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ரூ. 1.4 கோடி அன்னியச் செலாவணி மோசடி வழக்கில் சசிகலாவின் அக்காள் மகனும் பெரியகுளம் தொகுதியின்அதிமுக வேட்பாளருமான டி.டி.வி. தினகரனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் ரிசர்வ் வங்கியின் அனுமதியில்லாமல் வெளிநாட்டு பல கோடிகளை முதலீடு செய்தததுதொடர்பாக 1996ம் ஆண்டில் தினகரன் மீது மத்திய அமலாக்கப் பிரிவு வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு சென்னை எழும்பூர் 2வது பொருளாதாரக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் தினகரன் இன்று நேரில் ஆஜராக வேண்டும் நீதிபதி பெருமாள் உத்தரவிட்டிருந்தார். ஆனால் தினகரன்நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது சார்பில் வழக்கறிஞர் கூட ஆஜராகவில்லை.

இதையடுத்து தினகரனைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு நீதிபதி பெருமாள்உத்தரவிட்டார். வழக்கை அடுத்த மாதம் 14ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+