வினாத் தாள் அவுட்: காமராஜ் பல்கலை. தேர்வுகள் தள்ளிவைப்பு
மதுரை:
பி.எஸ்சி, பி.காம் இறுதியாண்டு தேர்வுக்கான வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே வெளியாகி விட்டதால் அந்தத்தேர்வுகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஒத்திவைத்துள்ளது.
பி,காம் மாணவர்களுக்கு இன்கம்டாக்ஸ் அண்ட் பிராக்டிஸ் பேப்பர் 2 தேர்வும், பி.எஸ்.சி மாணவர்களுக்கு மல்ட்டிமீடியா டெக்னாலஜி என்ற பாடத் தேர்வும் நேற்று நடைபெறுவதாக இருந்தது.
இந் நிலையில் அகில பாரதிய வித்யார்தி பரீஷத் என்ற அமைப்பின் தலைவர் ஆனந்தன் மற்றும் முன்னாள்தலைமைச் செயலாளர் பால்பாண்டி ஆகியோர் இந்த இரு தேர்வுகளுக்கான வினாத்தாள்களின் நகல்கள்ரூ.5,000க்கு விற்கப்படுவதை பல்கலைக்கழக அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.
இதனையடுத்து இந்தத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. பி.காம் தேர்வு அடுத்த மாதம் 3ம் தேதியும், பி.எஸ்சிதேர்வு வரும் 30 தேதியும் நடைபெறும் என்று பல்கலைக்கழக தேர்வுத்துறை கட்டுப்பாட்டாளர்கோபாலகிருஷ்ணன் கூறினார்.
அண்மையில் மதுரையில் சி.பி.எஸ்.இ. ப்ரீ-மெடிக்கல் தேர்வு வினாத்தாள் வெளியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications