தமிழகத்தில் பாடப் புத்தகங்கள் விலை கடும் உயர்வு: பெற்றோர் ஆதங்கம்
சென்னை:
7 மற்றும் 10ம் வகுப்பு பாடப் புத்தகங்களின் விலையை தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் கடுமையாகஉயர்த்தியுள்ளது.
2004 - 2005ம் கல்வியாண்டில் 7, 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள்அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதில் 7 மற்றும் 10 வகுப்புக்கான புதிய பாடப் புத்தகங்கள் இப்போதுஅச்சடிக்கப்பட்டு வருகின்றன. பிளஸ் ஒன் பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி இன்னும் தொடங்கவில்லை.
7 மற்றும் 10ம் வகுப்பு பாடப் புத்தங்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது பெற்றோர்களைஅதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
7ம் வகுப்பு பாடப் புத்தகங்களின் புதிய விலைகள், பழைய விலைகள் அடைப்புக்குறிக்குள்
தமிழ் - ரூ.15 (ரூ.13)
ஆங்கிலம் - ரூ.14 (ரூ.11.50)
கணிதம் - ரூ.35 (ரூ.12)
அறிவியல் - ரூ. 39 (ரூ.24)
சமூக அறிவியல் - ரூ.18 (ரூ.12)
10ம் வகுப்பு பாடப் புத்தகங்களின் புதிய விலைகள், பழைய விலைகள் அடைப்புக்குறிக்குள்
தமிழ் - ரூ.14 (ரூ.16)
ஆங்கிலம் - ரூ.17 (ரூ.13)
கணிதம் - ரூ.46 (ரூ.22.50)
அறிவியல் - ரூ.45 (ரூ.27)
சமூக அறிவியல் - ரூ.32 (ரூ.24.50)
10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தை தவிர மற்ற புத்தகங்கள் அனைத்தும் கடுமையாக விலை உயர்த்தப்பட்டதுபெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கல்வியாண்டில் 8 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.இந்த பாடப் புத்தகங்களின் விலையையும் உயர்த்த தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் திட்டமிட்டிருப்பதாகக்கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications