கருணாநிதியின் கண்ணீர்.. பா.ஜ.க. கிண்டல்
சென்னை:
ராகுலின் பேச்சு கருணாநிதியைத் தவிர வேறு யாருக்கும் கண்ணீரை வரவழைக்கவில்லை என்றுபா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிப்பதற்காக, நான் மலடு அல்ல, பிள்ளை குட்டி பெற்றவர்களுக்குத்தான் ராகுல் காந்தியின் பேச்சு கண்ணீரை வரவழைக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதிகூறியிருக்கிறார்.
நானும் ராகுலின் பேச்சை பலமுறை படித்துப் பார்த்தேன். எனக்கும் கண்ணீர் வரவில்லை.ஒருவேளை நான் திருமணம் ஆகாதவன் என்பதால் இருக்கலாம்.
ஒருவகையில் கருணாநிதி சொன்னதில் நியாயாம் இருப்பதாகவே தெரிகிறது.
பிள்ளைகளைப் பெற்று, அதில் இரண்டு பிள்ளைகள் (ஸ்டாலின்-அழகிரி) வாரிசு அரசியல் சண்டைபோட்டு, அது கொலை அளவுக்குச் (தா.கிருட்டிணன் கொலை) சென்று, அரசியலில் அவர்களைநிலை நிறுத்த, தான் பாடாய் படுவதைத் தான் கருணாநிதி அப்படிச் சொல்லியிருக்கலாம்.
கருணாநிதியைத் தவிர, பிள்ளை குட்டி பெற்ற யாருக்கும் ராகுலின் பேச்சு கண்ணீரை வரவழைக்காதுஎன்றார்.












Click it and Unblock the Notifications