For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோனியா குறித்து அவதூறு: நீதிமன்றத்தில் ஆஜராக ஜெவுக்கு சம்மன்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

சோனியா காந்தி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் ஜெயலலிதாதிருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

காங்கிரஸ் மற்றும் திமுகவினர் இந்த வழக்கைத் தொடர்ந்தனர்.

சோனியா காந்தி இந்தியர் தான் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்ட பின்னரும் அவரைவெளிநாட்டவர் என்றும், அவரது பதிபக்தி குறித்து விமர்சித்தும் ஜெயலலிதா பேசுவது சட்டவிரோதமானது, அது நீதிமன்ற அவமதிப்புக்குச் சமம் என்று கூறி இந்த வழக்குத்தொடரப்பட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கை உச்ச நீதிமன்ற விசாரணைக்குப் பரிந்துரைக்குமாறும் அவர்கள்கோரியுள்ளனர்.

இதனை விசாரித்த திருச்சி முன்சீப் கோர்ட் நீதிபதி கலாவதி, வரும் ஜூன் 21ம் தேதிக்குள்நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X