தமிழகத்தில் வேட்பு மனு தாக்கல் சூடு பிடிக்கிறது
சென்னை:
தமிழகத்தில் வேட்பு மனுத்தாக்கல் சூடு பிடித்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திமுக, இந்திய கம்யூனிஸ்ட்,பா.ஜ.க. வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாண்டிச்சேரியில் ஒரு தொகுதியிலும் மே 10ம் தேதி வாக்குப் பதிவுநடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது. நாளை மறுநாள் வேட்பு மனு தாக்கல்செய்ய கடைசி நாளாகும்.
அமாவாசை தினமான 19ம் தேதிக்காக பல முக்கிய வேட்பாளர்களும் காத்திருந்து அன்றைய தினம் வேட்பு மனுதாக்கல் செய்தனர். கடந்த இரு நாட்களாக ஏகப்பட்ட சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். நேற்று மாலைவரை 158 பேர் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள்சுயேச்சைகள்.
இந்த நிலையில் இன்று பல முக்கிய வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மதுரை மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் மோகன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரமோகனிடம் மனு தாக்கல்செய்தார். அதே போல நாகர்கோவில் தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெல்லர்மின் குமரி மாவட்ட ஆட்சித்தலைவடரிம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கோவையில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயன் அம் மாவட்ட ஆட்சித் தலைவர்அலுவலகத்திலும் ராமநாதபுரம் தொகுதி திமுக வேட்பாளர் பவானி ராஜேந்திரன் அம் மாவட்ட கலெக்டர்விஜயகுமாரிடமும் மனு தாக்கல் செய்தனர்.
பாண்டிச்சேரியில் பாஜக சார்பில் போட்டியிடும் லலிதா குமாரமங்கலமும் இன்று மனு தாக்கல் செய்தார். ரஜினிரசிகர்கள், பாஜக தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக சென்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார்.












Click it and Unblock the Notifications