பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் கலாட்டா: ஏட்டையாவுக்கு கல்தா
ஈரோடு:
பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் குடிபோதையில் கலாட்டா செய்த ஏட்டையாவின் பதவிபறிக்கப்பட்டது.
ஈரோடு வெள்ளக்கோவில் காவல் நிலையத்தின் சப்-இன்ஸ்பெக்டர் யமுனா தேவி. இவரிடம் அதேகாவல் நிலையத்தில் பணியாற்றிய ஏட்டையா சண்முகம் குடித்துவிட்டு வந்து கலாட்டா செய்துவந்தார்.
பல நேரங்களில் வரம்பு மீறியும் நடந்து கொண்டுள்ளார். இது குறித்து இன்ஸ்பெக்டரும்நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து ஈரோடு டி.ஐ.ஜி. அசுதோஸ் சுக்லாவிடம் யமுனாதேவிபுகார் கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து ஏட்டையா சண்முகத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.மேலும் சண்முகத்தின் மீது விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்தார்.
விசாரணையில் யமுனா தேவியிடம் சண்முகம் குடிபோதையில் கலாட்டா செய்தது உறுதியானது.இதையடுத்து சண்முகத்துக்கு பணியில் இருந்து கட்டாய ஓய்வு தர டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து ஏட்டையா சண்முகம் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவரைடிஸ்மிஸ் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications