கள்ளச் சாராயத்துக்கு 4 பேர் பலி: உணவு விஷமானதால் இறந்ததாக போலீஸ் பூ சுற்றல்
சென்னை:
சென்னை அருகே கள்ளச் சாராயம் குடித்த 2 பெண்கள் உள்பட 3 பேர் பலியானார்கள். மேலும்ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டுள்ளார்.அதேபோல் திருச்சியிலும்கள்ளச்சாராயத்துக்கு ஒருவர் பலியானார்.
சென்னை அருகே எண்ணூ
சகாயம், மைக்கேல் ஆகிய இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் சகாயம் சிகிச்சை பலனின்றி இன்று காலைஇறந்தார்.
மைக்கேல் கண் பார்வை பறி போய் ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தேர்தல் நேரத்தில் கள்ளச் சாராய சாவுகள் விவரம் வெளியானால் அரசுக்கு பிரச்சனையாகும்என்பதால் இதை மூடி மறைக்க போலீசார் முயன்றனர். அவர்களையும் மீறி விஷயம் வெளியில்வந்துவிட்டது.
இந் நிலையில் இவர்கள் கள்ளச் சாராயம் குடித்து இறக்கவில்லை என்றும் உணவு விஷத் தன்மைஅடைந்த காரணத்தால்தான் இறந்ததாகவும் போலீஸார் கூறுகின்றனர்.
கள்ளச் சாராயத்தை தடுக்கத் தவறிய போலீஸ், அந்தத் தவறோடு இன்னொரு தவறாக பெரும்பொய்யையும் சொல்லிக் கொண்டிருக்கிறது என்கின்றனர் அப் பகுதி மக்கள்.
திருச்சியில் ஒருவர் பலி:
இந் நிலையில் திருச்சி அருகே கள்ளச் சாராயம் குடித்த ஒருவர் பலியானார்.
திருச்சி அருகே உள்ள மண்ணச்சநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (31 ) . இவர் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ளபாறலூரில் சாராயம் தயாரிக்கும் இடத்திற்கே போய் குடித்துள்ளார். இதனையடுத்து மயக்கமடைந்த அவர் திருச்சி அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.












Click it and Unblock the Notifications