காசோலை மோசடி வழக்கில் டி.ஆர். பாலு விடுதலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

14 ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட காசோலை மோசடி வழக்கில் இருந்து தென்சென்னை மக்களவைத் தொகுதிதிமுக வேட்பாளர் டி.ஆர். பாலு விடுவிக்கப்பட்டார்.

பல்லாவரத்தில் டி.ஆர். பாலுவுக்கு ஒரு தியேட்டர் உள்ளது. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களின்பாதுகாப்பிற்காக தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழகத்திற்கு (ஈ.எஸ்.ஐ.) வழங்கப்பட்ட காசோலைகளில்இரண்டு (ரூ.1075, ரூ.1500) வங்கியிலிருந்து திரும்பிவந்துவிட்டது.

இது தொடர்பாக தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டுக் கழகம் எழும்ஸர் நீதிமன்றத்தில் டி.ஆர். பாலு, அவரதுசகோதரர் டி.ஆர். சக்திவேலு ஆகிய இருவர் மீது வழக்குத் தொடர்ந்தது.

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு டி.ஆர். பாலுவுக்கு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து எழும்பூர்நீதிமன்றத்தில் ஆஜராகி, இரு காசோலைகளுக்கான பணத்தை வட்டியுடன் (ரூ.10,825) அவர் செலுத்தினார்.

இவ்வழக்கில் இருந்து தம்மை விடுவிக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார். இதனையடுத்து இவ்வழக்கில்இருந்து டி.ஆர்.பாலுவை விடுவித்து நீதிபதி ராஜசேகரன் தீர்ப்பளித்தார். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட டி.ஆர். சக்திவேலு 2001-ல் இறந்துவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+